மதுரை, மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மதுரையில் பல்ேவறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மாணவர் அமைப்பு அறிவித்திருந்தது. இதனால், நேற்று அனைத்து கல்லூரிகள் மற்றும் மதுரையில் தமுக்கம், காந்தி மியூசியம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.