மதுராந்தகம், மார்ச் 15: மதுராந்தகம் நகராட்சியில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து, அப்பகுதி வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில், நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், அச்சிறுப்பாக்கம் போலீசார் சார்பில், அதே பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தின் இன்ஸ்பெக்டர் சரவணன் பேசுகையில், இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் அனைவரும் தங்களது கடைகளில், வணிக நிறுவனங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.