சின்னமனூர், மார்ச் 15: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து பொன்னாய் மின்னுகிறது.கம்பம் பள்ளத்தாக்கு லோயர்கேம்ப் துவங்கி வெட்டுகாடு, கூடலூர், கேஜிபட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், கம்பம் மெட்டு சாலை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், புதூர், ஆனைமலையான்பட்டி, ராயப்பன்பட்டி, துர்கையம்மன்கோயில், வேம்படிகளம், சின்னமனூர், கே.கே.குளம் பரவு, முத்துலாபுரம் பரவு, பெருமாள்கோயில்பரவு, சீலையம்பட்டி, கோட்டூர், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புகோட்டை, உப்பார்பட்டி விலக்கு, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரையில் நீண்டு நெடிய பள்ளத்தாக்காக தேனியிலிருந்து குமுளி மலை அடிவாரம் வரை நெல் விவசாயம் நடைபெற்று வருகி
றது.நடப்பாண்டில் இரண்டாம் போக நெல், கதிர்முற்றி தலைசாய்ந்து பொன்னிறமாக மின்னுகிறது. இன்னும் சில வாரங்களில் அறுவடை நிறைவடையும் நிலை உள்ளது. கதிர் பொன் நிறமாய் மின்னுவதை திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள், நின்று செல்பி எடுத்துச் செல்கின்றனர்.