காளையார்கோவில், மார்ச் 15: காளையார்கோவில் பகுதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு திட்டங்களுக்கான பிளக்ஸ் போர்டு அகற்றப்படாமல் உள்ளது. காளையார்கோவில் பகுதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் அச்சிடப்பட்ட அரசு திட்டங்களுக்கான பிளக்ஸ் போர்டு அதிகாரிகளின் கவனக்குறைவால் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது.