சிவகிரி, மார்ச் 14: கொடுமுடி தாலுகாவில் உள்ள கிளாம்பாடி பேரூராட்சி வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவுக்கு உட்பட்ட கிளாம்பாடி பேரூராட்சியில் 11 சமுதாய கழிப்பிடங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியில் கழிப்பிடம் இல்லாத 230 வீடுகள் கணக்கிடப்பட்டு அவற்றிற்கு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 230 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன. பேரூராட்சி பகுதிகளில் திறந்தவெளியை கழிப்பிடமாகவோ,சிறுநீர் கழிக்கவோ பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.