நீர்நிலை புறம்போக்கில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி ஆய்வு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

சென்னை: திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி) பேசியதாவது: மாரிமுத்து: பட்டா வழங்குவதில் இன்னும் பிரச்னைகள் இருக்கிறது. ஏரி இருக்கிறது  என்று சொல்கிறார்கள். அங்கு போய் பார்த்தால் ஏரியை காணவில்லை. எந்த இடங்களில் இருந்தாலும் மாவட்ட  கலெக்டர் மூலம் அங்கு வாழ்கிற மக்களுக்கு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க  கேட்டுக் கொள்கிறேன்.  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்: பல காலங்களாக  ஒரு இடத்தில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் பணியை கலைஞர் தான் தொடங்கி  வைத்தார். 10 ஆண்டு காலம் குடியிருந்தால் பட்டா வழங்கும் திட்டத்தை  அறிவித்ததும் கலைஞர் தான். இப்போது நீங்கள் கேட்பது நீர்நிலை உள்ளிட்ட  புறம்போக்கு இடங்களில் வாழ்கிறவர்களுக்கு என்ன செய்யலாம் என்று  கேட்கிறீர்கள். அந்த இடங்களுக்கு பட்டா வழங்க முடியுமா என்பதை நாங்கள்  ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். சட்டத்துக்குட்பட்டு அவர்களுக்கு  பட்டா வழங்குவது பற்றி எதிர்காலத்தில் சிந்தித்து முதல்வர் கவனத்துக்கு  கொண்டு சென்று வேண்டிய பணிகளை செய்வோம்….

The post நீர்நிலை புறம்போக்கில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி ஆய்வு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: