உத்திரமேரூர், மார்ச் 14: உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோயில் முறைகேடு தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, கோயில் தக்கார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். உத்திரமேரூர் பஜார் வீதியில் அறநிலையதுறைக்கு சொந்தமான சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இரட்டை தாளீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொநத்மாக உத்திரமேரூர் பஜார் வீதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் சில ஏக்கரில் நிலங்களும் உள்ளன. இந்த கோயிலை நிர்வாகம் செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கோயில் கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்ததாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கர்ணா என்பவர் அறநிலைத்துறைக்கு புகார் அளித்தார். இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 2ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.