சென்னை, மார்ச் 14: சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 8.9.2016 - 8.10.2016 ஆகிய 30 நாட்களில் ₹78 கோடி வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி, பணம் மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு (43). இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதும், வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதாக போலி பில்களை தயாரித்து, ஒரே வங்கியில் இருந்து 8 வங்கி கணக்கில் வெளிநாடுகளுக்கு ₹78 கோடி பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் மணி அன்பழகனை கடந்த 1.4.2017 அன்று கைது செய்தனர்.