கீழ்வேளூர், மார்ச் 12:நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த அத்திப்புலியூர் பெரியார் தெருவை சேர்ந்த முருகையன் மகன் பாரதி (35). இவரது நண்பர் மகேஷ் (38). இருவரும் அத்திப்புலியூரில் இருந்து கீழ்வேளூருக்கு பைக்கில் சென்றபோது இவர்கள் மீது டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பாரதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.