அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சரியான நேரத்தில் ரயில்கள் இயக்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 75க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் இருந்து காலை 6.30 மணியிருந்து 7.30 மணி வரை செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து காலதாமதாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியிலிருந்து அரக்ேகாணம் வழியாக சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் நேற்று காலை வந்தது. இந்த ரயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்ல வேண்டும். ஆனால், ரயில் புறப்படுவதற்கு சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் அரக்ேகாணத்திலிருந்து காலை 7.10 மணிக்கு சென்னைக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. மேலும், திருத்தணி ரயில் காலதாமதமாக 7.25 மணிக்கு புறப்பட்டு சென்றது.