புதுக்கோட்டை, மார்ச் 8: தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள் வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறித் தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகங் களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள், மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.