முத்துப்பேட்டை, மார்ச் 8: முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அழகேசன் மனைவி செல்வி, ரவி மனைவி பிரேமா, பாலராமன் மகன் அன்பழகன். இவர்களுக்கு சொந்தமான 11 ஆடுகள் நேற்று வழக்கம்போல் அவர்களது வீட்டிலிருந்து மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சுந்தரம் மகன் வீரசிங்கம் என்பவரது தோப்பில் அந்த 11 ஆடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை கண்ட ஆடுகளின் உரிமையாளர்களும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.