சோமனூர், மார்ச் 8: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த நூலகம், கடந்த 1998ஆம் ஆண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையம் எதிரே புதிய சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2009ஆம் ஆண்டு ஆறு வழிச்சாலை அமைக்கும் போது சாலை விரிவாக்கத்தின் போது இந்த நூலகம் இடிக்கப்பட்டது, அப்போது அதற்கான இழப்பீட்டுத் தொகையையும், கோவை மாவட்ட நூலகத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நூலகம் அமைப்பதற்கு அரசு கட்டிடம் கிடைக்காததால், கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது, கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.