கோவை, மார்ச் 8: கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில் வருகிற ஜூன் மாதம் 2ம்தேதி நடைபெற உள்ள யூ.பி.எஸ்.சி குடிமையியல் முதல்நிலை தேர்வுக்கான 3 மாதகால இலவச பயிற்சி, வரும் மார்ச் 10ம்தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. இலவச பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நேரில் வந்து, தங்களது சேர்க்கையை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.