காஞ்சிபுரம், மார்ச் 8: மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு நேற்று காலை 10 மணிக்கு தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 9 மணிமுதல் தாய்மார்கள் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தனர். 11 மணி ஆகியும் அதிகாரிகள் வரவில்லை. இதற்கிடையில், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், கடந்த சில மாதங்களுக்கு முன் 6.8 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை திறந்தார். அந்த குழாயில் தண்ணீர் வரவில்லை என எம்எல்வுக்கு புகார் சென்றது. இதையொட்டி, மருத்துவமனையில் ஆய்வு செய்ய எம்எல்ஏ எழிலரசன் அங்கு சென்றார். அப்போது அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடப்பதை பார்த்த அவர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரிடம் விசாரித்தார். அப்போது, அரசு நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை என அவ பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த எம்எம்ஏ, சட்டமன்றத் தொகுதி மக்களின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். எனக்கு முறையாக தகவல் அளிக்காமல் அரசு நிகழ்ச்சி எப்படி நடத்தலாம் என கேள்வி எழுப்பினார். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் விவாதம் நடந்தது.