திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: இந்தியாவிலேயே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் மட்டும் தான் நடராஜர் சிலைக்கு எதிரே நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை துவங்கிய நாட்டியாஞ்சலி அதிகாலை வரை நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பெங்களூர், அமெரிக்கா, சென்னை, மும்பை, நாகை, அரியலூர், திருச்சி பகுதிகளில் இருந்தும், தமிழ்நாடு மட்டு மல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த 22 குழுவினரின் நாட்டியாஞ்சலி செலுத்தினர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நாட்டியாஞ்சலிக்கு 50க்கு மேற்பட்ட நாட்டியாஞ்சலி குழுவில் பங்கேற்ற நடனகலைஞர்கள் 400 க்கு மேற்பட்டோருக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது.