திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் தங்களது கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் தாக்குதலிருந்து கட்டுப்படுத்தி கொள்ள தடுப்பூசி முகாமானது வரும் 8ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. தடுப்பூசிப்பணிகள் வரும் 8ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம்தேதி வரையில் மாவட்டம் முழுவதும் கிராம வாரியாக நடைபெறுகிறது.