கோவை, மார்ச் 6: கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனி விமானத்தில் டெல்லி திரும்பினார். சூலூர் விமான படைதளத்துக்கு விருது வழங்கும் விழா மற்றும் ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார். நேற்று முன்தினம் தனது நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட ஜனாதிபதி கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் நேற்று காலை கோவை விமானநிலையம் சென்ற ஜனாதிபதி 10.13 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.