நிவாரணம் வழங்க கோரிக்கைநாகை, மார்ச் 6: நாகை அடுத்த கீழ்வேளூர் அருகே புயலால் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா புதுப்பள்ளி கிராம மக்கள் சார்பில் நாகை கலெக்டர் சுரேஷ்குமாரிடம் வழங்கி மனுவில்: புதுப்பள்ளி கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி வீசிய கஜா புயல் மற்றும் கடல் நீர் உட்புகுந்ததில் தென்னை, மா, முந்திரி மற்றும் இதர மரங்களும் முற்றுலுமாக சேதமடைந்து விட்டது.