ஆரணி, மார்ச் 6: ஆரணி, தேவிகாபுரத்தில் உள்ள 4 நகை மற்றும் அடகு கடைகளில் வருமான வரித்துறையினர் நடத்திய 16 மணி நேர சோதனையில் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், பணம், நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆரணி லிங்கப்பன் தெருவில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அப்போது ஆரணியில் உள்ள 3 நகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு சொந்தமான தேவிகாபுரத்தில் உள்ள ஒரு நகை கடை என மொத்தம் 4 கடைகளில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் 4 குழுவாக சென்று சோதனை நடத்தினர்.