மணப்பாறை, மார்ச் 1: வையம்பட்டி அருகே சுங்கச்சாவடி பாதுகாவலர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டியில் சுங்கசாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மூன்று சுற்றுலா வேனில் சென்னை நோக்கி சென்றுள்ளனர். அப்போது இரு வேனில் இருந்தவர்கள் சுங்க கட்டணம் செலுத்திய நிலையில், மூன்றாவது வேனில் வந்த பிரமுகர்கள் சுங்க கட்டணம் கட்ட மறுத்து சுங்க சாவடி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் வசூலிக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சமக பிரமுகர் ஒருவரை சுங்க சாவடி பாதுகாவலர் தங்கமாப்பட்டியை சேர்ந்த அடைக்கன் வெள்ளைச்சாமி(52) என்பவர் தடுத்து நிறுத்தினார்.