வேலூர், மார்ச் 1: ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல தமிழக அரசு சார்பில் ஒருவருக்கு ₹20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களின் புனித தலங்களை உள்ளடக்கியது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். www.bcmbcmw.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.