மூணாறு,பிப்.28: கேரளா மாநிலத்தில் முதன் முறையாக பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலைகுடி பகுதியில் நூலகம் துவங்கப்பட்டுள்ளது. மூணாறில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இடமலைகுடி. இங்கு 25 குடிகள் அமைந்துள்ளன. மேலும் ஏராளமான ஆதிவாசி குடும்பங்கள் இங்கு குடியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆதிவாசி குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி அறிவுக்காக இங்கு பழங்குடி ஆரம்ப பாடசாலை துவங்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் குழந்தைகள் மற்றும் ஆதிவாசி மக்களின் பொது அறிவு வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரளா மாநிலத்தில் முதல் முறையாக இடமலை குடியில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமாக இந்த நூலகத்தில் பிரபலங்களின் வாழ்க்கை சரித்திரம், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பிரபல மனிதர்களின் பயணத் தொகுப்புகள், தியாகிகளின் சரித்திரங்கள் உள்ளடக்கிய ஏராளமான புத்தகங்கள் வாசிப்பதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.