விஷம் குடித்த மைனர் ஜோடி

உசிலம்பட்டி, பிப்.28: எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் குணா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு முடித்துள்ளார். பெற்றோர் இல்லை. பாட்டியிடம் வளர்ந்து வந்தார். சோழவந்தானை சேர்ந்தவர் அனிதா(18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). நர்ஷிங் படித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதற்கு அனிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சோழவந்தான் மாரியம்மன் கோவிலில் நேற்று திருமணம் செய்தனர். வயது குறைவாக உள்ளதால் பிரித்துவிடுவார்கள் என பயந்த காதல் ஜோடி விஷம் குடித்துவிட்டனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: