மன்னார்குடி, பிப். 28: கோட்டூரில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு செல்லும் மக்களிடம் அதிகாரிகள் பதிலளிக்காமல் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர் என பெண்கள் குற்றஞ்சாட்டினர். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தை எம்எல்ஏ ஆடலரசன் துவக்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் வடக்கு ஒன்றி யத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் கோட்டூர், புழுதிக்குடி, கருப்பு கிளார், திருக்களர், வெங்காத்தான்குடி, ஆகிய 5 ஊராட்சிகளில் நேற்று நடை பெற்றது. இதன் துவக்க விழா கோட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்எல்ஏ ஆடலரசன் தலைமை வகித்தார். கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் வரவேற்றார். மாநில விவசாய அணி அமைப்பாளரும் முன்னாள் எம்பியுமான ஏகேஎஸ் விஜயன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.