மதுரை, பிப். 26: துபாயில் வேலை பார்த்த கணவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும், உரிய விசாரணை நடத்தி அவரது உடலை மதுரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனைவி தனது இருமகள்களுடன் டிஆர்விடம் மனு கொடுத்தார். மதுரை ஹார்விபட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவருக்கு முத்தீஸ்வரி என்ற மனைவி, பூமிகா, புவனேஸ்வரி என்ற 2 மகள்கள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த 2017 ஜூலையில் துபாயில் கூலி வேலைக்கு சென்றார். அங்கிருந்து தினமும் செல்போன் மூலம் தனது மனைவி, மகள்களுடன் பேசி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துவிட்டார் என துபாயில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.