‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

உசிலம்பட்டி, பிப்.22: உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள 18 பஞ்சாயத்துகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இறுதியாக நக்கலப்பட்டி ஊராட்சி மாதரையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில், ஒன்றிய செயலாளர் சுதந்திரம் முன்னிலையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர் தியாகராஜன் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, கழிப்பறை, அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றும், கிராமங்கள் தோறும் திருட்டுத்தனமாக பகல், இரவு, முழுவதும் மது விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.

இதனால் மது விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சி வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்கள். இதில் செயற்குழு உறுப்பினர் சோலை ரவிக்குமார், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: