பைக் மோதி காவலாளி பலி: வாலிபர் படுகாயம்

செங்கல்பட்டு, பிப். 22: செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (45). தனியார் நிறுவன காவலாளி. நேற்று காலை பரமசிவம், வேலைக்கு புறப்பட்டார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரஜாக் புலிப்பேட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில் தூக்கி விசப்பட்ட அவர், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பைக்கை ஓட்டி வந்த ஆனூரை சேர்ந்த வேலு (28) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த வேலுவை சிசிச்சைக்காகவும், சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: