சிவகிரி, பிப். 21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.38 ஆயிரத்து 992க்கு நிலக்கடலை ஏலம் நடந்தது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நிலக்கடலை விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 744 கிலோ நிலக்கடலை அதிக பட்சமாக கிலோ ரூ.53, குறைந்த பட்சமாக ரூ.47.10 என மொத்தம் ரூ.38 ஆயிரத்து 992க்கு ஏலம் போனது.