மதுரை, பிப். 21: மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நாளை (22ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. முகாமில் தனியார் துறையை சேர்ந்த பிரபல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ‘முகாமில் 10ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றுக்கொள்ளலாம்.