நீட் பயிற்சி மையத்துக்கு சென்ற மாணவி மாயம்

நாகர்கோவில், பிப்.21 :   பளுகல் அருகே உள்ள மூவாற்றுகோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மகள் ஸ்ரீநியா (19). மருத்துவ படிப்புக்கான தேர்வு எழுதுவதற்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு நீட் சென்டரில், ஸ்ரீநியா படித்து வந்தார். சம்பவத்தன்று அடையாள அட்டை வாங்க நீட் மையத்துக்கு செல்வதாக கூறி சென்றார்.

ஆனால் அதன் பின்னர் ஸ்ரீநியா திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தோழிகளிடம் விசாரித்தும் தகவல் இல்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது தாயார் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஸ்ரீநியாவை தேடி வருகிறார்கள். மாணவி நியா கடத்தப்பட்டு இருப்பாரா? அல்லது வேறு விவகாரம் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: