நாகர்கோவில், பிப்.21 : பளுகல் அருகே உள்ள மூவாற்றுகோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மகள் ஸ்ரீநியா (19). மருத்துவ படிப்புக்கான தேர்வு எழுதுவதற்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு நீட் சென்டரில், ஸ்ரீநியா படித்து வந்தார். சம்பவத்தன்று அடையாள அட்டை வாங்க நீட் மையத்துக்கு செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் அதன் பின்னர் ஸ்ரீநியா திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.