சென்னிமலை, பிப்.20: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பெரியவேட்டுவபாளையம் இபி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (34). இவர், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். நேற்று காலை லோகநாதன் மொபட்டில் பெருந்துறையில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வெள்ளோடு சின்னக்குளம் அருகே வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த சாக்கடைக்குள் மொபட்டுடன் லோகநாதன் தலைகீழாக விழுந்தார்.அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் கழிவுநீர் உள்ளே புகுந்து மூச்சுத்திணறி அவர் இறந்தார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.