மதுரை, பிப். 20: மாநில அளவிலான கூடைப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நேற்று மதுரையில் துவங்கியது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடை பந்தாட்டம், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நேற்று மதுரையில் துவங்கியது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு கூடைபந்தாட்ட கழக தலைவர் ராஜ்சத்தியன் வரவேற்றார். இதில் எம்எல்ஏ சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.