சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ராணுவ வீரர்களுக்கு தீபாஞ்சலி

மதுரை, பிப்.20: காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மதுரை அவுட்போஸ்டில் காமராஜர் பல்கலை கழக உறுப்புக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு பலியான ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில், செயலாளர் மோகன்குமார், பார் கவுன்சில் உறுப்பினர் அசோக் ஆகியோர் முன்னிலையில் பலியான ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் கூறும் போது, “தீவிரவாத தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, வழக்கறிஞர்கள் சார்பில் நிதி திரட்டி, அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்படும்” என்றார்.

Related Stories: