சித்தாலையில் மருத்துவமனை அமைக்க கோரிக்கை நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருமங்கலம், பிப்.20: நூலகத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடன் நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பொதுநூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. மதுரை, தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் இளங்கோ லைமை வகிக்க, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் குணசேகரன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

கூட்டத்தில், நூலகர்களுக்கு அரசு நிதியிலிருந்து கருவூலத்தில் ஊதியம் வழங்க வேண்டும், ஊர்புற நூலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். நூலகர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாத நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும், நூலகத்துறையில் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: