திருமங்கலம், பிப்.20: நூலகத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடன் நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பொதுநூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. மதுரை, தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் இளங்கோ லைமை வகிக்க, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் குணசேகரன் அறிக்கையை தாக்கல் செய்தார்.