கஞ்சா விற்ற 2 பேர் கைது

சோழவந்தான், பிப்.20: சோழவந்தான் அருகே வி.குளத்துப்பட்டி பிரிவில் இரண்டு பேர் கஞ்சா விற்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ.தமிழரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கஞ்சாவுடன் பிடித்தனர். விசாரனையில், இவர்கள் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த எலும்பன் என்ற ஜெயக்குமார்(38), அழகு(41) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, நான்கு கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: