சென்னை, பிப். 19: மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சூளைமேடு அவ்வைபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (36). காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் உள்ள செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிந்து. தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிந்து, கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.