நாகர்கோவில், பிப். 15: பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் 236 எஸ்ஐக்களை இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளன. அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காவல் துறையில் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.