குலசேகரம், பிப். 15: வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ₹1 லட்சத்தை கைப்பற்றினர்.வேர்கிளம்பி பேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிக்கான டென்டர் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்களிடம் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று மாலை விஜிலென்ஸ் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் விஜிலென்ஸ் போலீசார் மற்றும் தக்கலை வட்டாச்சியர் ராஜாசிங் ஆகியோர் திடீரென வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.