மூணாறு,பிப்.14: மூணாறில் தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி இடையே ரூ.381 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை மூணாறு காவல் நிலையம் அருகே இப்பணியின் போது ஜேசிபி இயந்திரம் மூலம் மண் எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த சின்னான், வாசு ஆகியோர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து மண்ணில் இருந்து அவர்களை வெளியே எடுத்தனர்.