கம்பம் பள்ளியில் பணம், காமிரா திருட்டு

கம்பம், பிப். 14: கம்பத்தில் தனியார் பள்ளி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி காமிரா திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கம்பம் எல்.எப்.மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பெரோஸ் ஜாபர் குரைஷ் (49) இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் காலை வழக்கம்போல் பள்ளிகூடத்தினை பள்ளி மேலாளர் திறக்க சென்றுள்ளார். அப்போது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணமும், சிசிடிவி காமிரா, டிவிஆர், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பெரோஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Related Stories: