நாமக்கல், பிப்.14: நாமக்கல்லில் சுரைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மாட்டுக்கு தீவனமாக போடுகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் லத்துவாடி, அணியாபுரம், கோனூர், கந்தம்பாளையம், ராசிபாளையம் மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு சுரைகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாட்டு சுரைக்காய் குறித்து அணியாபுரத்தை சேர்ந்த விவசாயி பிரேம் கூறியதாவது: சுரைக்காய்க்கு மிகக்குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பயிரிட்ட 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். இப்பகுதிகளில் பாம்பு, வால் மற்றும் குண்டு என 4 வகைகள் இருந்தாலும் பாம்பு மற்றும் குண்டு சுரைக்காய்க்கு தான் கிராக்கி அதிகம்.