காமராஜர் பல்கலை துணைவேந்தர் தகவல் மாநில நீச்சல் சென்னை அணி சாம்பியன் மதுரைக்கு இரண்டாமிடம்

மதுைர, பிப். 13: தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல்குளத்தில் மாநில அளவிலான ஷார்ட்கோர்ஸ் நீச்சல் போட்டி நடந்தது. மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் மதுரை விகாஷ், ஜோஸ்வா, கணேஷ், சென்னை ஆகாஷ் உள்பட 9 பேர், பெண்கள் பிரிவில் ரோஷிணி உள்பட 9 பேர் தனிநபர் சாம்பியன் பட்டங்களை பெற்றனர். மொத்தம் 551 புள்ளிகள் எடுத்து சென்னை டால்பின் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மதுரை எஸ்டிஏடி அணி 2ம் இடத்தை பெற்றது.பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு நீச்சல்சங்க துணைத்தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், துணைத்தலைவர் சிவபாலன் மற்றும் விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: