ஊட்டி, பிப். 12: ஊட்டி - கூடலூர் சாலையில் நடுவட்டம் முதல் கூடலூர் வரையில் பல இடங்களில் சாலை சீரமைப்பு மற்றும் இன்டர்லாக் கற்கள் பொருத்தும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது.
இந்த இடங்களில் இருந்த ஜல்லி கற்கள் மற்றும் மணல் சாலையில் அங்காங்கே பரவி கிடக்கிறது. இதனால், இச்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து நாள் தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.