வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

 

ஊட்டி, மே 22: நீலகிரி மாவட்டம் கெத்தை, இரியசீகை, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய பிரதான சாலையாக ஊட்டி- மஞ்சூர் சாலை உள்ளது. இதுதவிர அருகாமையில் உள்ள கிராமப்புறங்களுக்கு செல்ல கூடிய அரசு பஸ்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இச்சாலையில் நுந்தளாமட்டம் 6வது மைல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையின் இருபுறமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிறுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் இதுபோன்று முறையற்று வாகனங்கள் நிறுத்துவதால் அரசு பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஊட்டிக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவல்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: