புதுக்கோட்டை,பிப்.12: குமாரமங்கலத்தில் ரயில் நின்று செல்ல பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் புதுகை சாலையில் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. டிஆர்ஓ ராமசாமி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். சமூக நல பாதுகாப்புக்குழு உதவித் தலைவர் பாலகிருஷ்ணன் கொடு த்த மனுவில் கூறியிருப்பதாவது: விவேகானந்த நகர் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.