வேம்புகுடியில் நாளை குறைதீர் சிறப்பு முகாம்

அரியலூர், பிப். 7: அரியலூர் மாவட்டத்தில் 6வது கட்டமாக உடையார்பாளையம் வட்டத்தில் வேம்புகுடி, பாப்பாக்குடி (வ) ஆகிய இரண்டு கிராமங்களிலும் வருவாய் திட்ட முகாம் நாளை நடக்கிறது. தாசில்தார்கள் தலைமை வகிக்கின்றனர். முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: