தா.பழூர், மே9:அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது . இதில் அருள்மிகு விஸ்வநாதர் , விசாலாட்சி அம்பாள் மற்றும் பிரகாரத்தில் வீற்றிருக்கும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு கிருத்திகை தினத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தணம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோயில் உள் பிரகாரத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது.
The post விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் ஆலயத்தில் பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.