பொதட்டூர்பேட்டையில் புரட்சி பாரதம் ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பட்டு, பிப்.5: பள்ளிப்பட்டு ஒன்றிய புரட்சி பாரதம் கட்சியின் ஆலோசனை கூட்டம் பொதட்டூர்பேட்டையில் நடந்தது.  கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சிட்டிபாபு தலைமை தாங்கினார்.  செயலாளர் நாகூர் வரவேற்றார்.

மாநில இளைஞரணி தலைவர் மணவூர் ஜி.மகா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கிளைகள் தோறும் கட்சி கொடியேற்றி கல்வெட்டு திறக்கவேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்.பொதட்டூர்பேட்டை அருகே வள்ளியம்மாள் கண்டிகை பகுதியில் வருவாய் துறையினரால் அகற்றப்பட்ட 13 குடும்பத்தினரை அதே இடத்தில் வசிக்க நீதிமன்றம் மூலம்நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.இந்த கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஜான், ரமேஷ், செல்வம், ரவி, கோவிந்தன், ஒன்றிய நிர்வாகிகள் ஸ்டாலின், ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: