மன்னார்குடி, பிப். 2:கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தானில் இருந்து சித்தமல்லி வழியாக செரு களத்தூர், சோத்திரியம் செல்லும் சாலையில் சித்தமல்லி பாலவாய் இடை யிலான பல்லாங்குழி சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானில் இருந்து சித்தமல்லி வழியாக செருகளத்தூர், சோத்திரியம் செல்வதற்கு சுமார் 10 கிமீ தூரத்திற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையை சித்தமல்லி, செருகளத்தூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், சிறு வணிகர்கள் செருகளத்தூர், சோத்திரியம் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவசர கதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத சாலையில் சித்தமல்லி அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியிலிருந்து செருகளத்தூர் வரையிலான 3 கிமீ தூரத்திற்கான குறுக்கு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறி கிடக்கிறது.